தொடர்புடைய செய்திகள்
- அமிர்தாப் அழைத்த பாசக்காரர்- பாக்கியராஜை பாராட்டிய சீனுராமசாமி !
- 5ஆம் வகுப்பு படிக்கும்போது ‘பாட்ஷா’ பார்த்தேன்: இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் பதிவு!
- பக்தர்களுக்கு அனுமதியின்றி திறக்கப்பட்டது சொர்க்கவாசல்!
- நாளை சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பக்தர்கள் அதிருப்தி
- பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் வசம்பு மூலிகை !!
ரயில் தடம்புரண்ட விபத்தில் 9 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் பகுதியிலிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பிகானீர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோகோமொனி என்ற பகுதியில் இந்த ரயில் தடம் புரண்டதில் அதிலுள்ள 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த விபத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. தற்போது படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
