1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 53 coroners confirmed coronary infection

53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

53 coroners confirmed
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,656 ஆக ஆதிகரித்துள்ளது. இதுவரை 559 பேர் உயிரிழந்த நிலையில் 2,842 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மஹாராஷ்டிர மாநிலம் , மும்பையில் 3651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையில், 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலானோருக்கு நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: அதிர்ச்சி தகவல்