1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 25 மே 2020 (22:56 IST)

3 பேரை தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி. கருத்து

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா நாடு இப்போது ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை 50 ஆண்டுகளாக ஆண்ட குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மக்களிடையே பீதியை உண்டாக்கி வருகின்றனர் என காங்கிரஸ் தலைமையை குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கொரொனா பரவல் ஒடுங்கும் வரை அவர்கள் 3 பேரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைகூறியுள்ளார்.