வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 மே 2020 (22:51 IST)

நிலநடுக்கத்தின் போது புன்னகையுடன் பேட்டியளித்த பிரதமர் !

நியூசிலாந்து பிரதமர்  ஜெசிந்தா ஆர்டன் தொலைக்காட்சியில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நில நொடிகள் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஆனால் பிரதமர் ஜெசிந்தா பதற்றமில்லாமல் புன்னகையுடன் தொலைக்காட்சியில் பேட்டியளித்து முடித்தார்.

நிலநடுக்கத்தின்போது இப்படி மற்றவர்கள் சிரிக்க முடியுமா? என்று நெட்டிசன்கள் பலரும் சமூக விவாதித்து வருகின்றனர்.

அதேசமயம்  ஜெசிந்தா ஆர்டர் சிரித்துக்கொண்டே பேட்டியளித்த வீடீயோ வைரல் ஆகி வருகிறது.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.