1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 144 ban in utter pradesh

முன்னாள் எம்பி சுட்டுக்கொலை.. 144 தடை உத்தரவு பிறப்பித்த காவல்துறை..!

உத்தரபிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி சுட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் எம்பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் எம்பி அதிக் மற்றும் அவரது கூட்டாளி நேற்று கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென அவரும் அவரது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியர்களே எச்சரிக்கையா இருங்கள்? சூடானில் ராணுவப்போர்!