1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today share market sensex and nifty status

ஜெட் வேகத்தில் உயரும் பங்குச்சந்தை.. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 700க்கும் மேல் உயர்வு..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை 9 மணிக்கு பங்கு சந்தை தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் சற்றுமுன் மும்பை பாங்கு சந்தையின் சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 769 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 234 புள்ளிகள் உயர்ந்து 22 200359 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் மனப்புரம் கோல்டு, நாட்கோ பார்மா உள்பட ஒரு சில பங்குகள் தவிர மற்ற அனைத்து பங்குகளும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் பங்கு சந்தை உச்சம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தகுந்த ஆலோசனை பெற்று சரியான பங்குகளில் முதலீடு செய்யும் அறிவுறுத்தப்படுகின்றனர்
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒரு சவரன் 50 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை.. அடுத்தது ஒரு லட்சம் இலக்கா?