1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today share market sensex and nifty status

2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. தேர்தலுக்கு பின் உச்சம் பெறும் என தகவல்..!

share
பங்குச்சந்தை கடந்த வாரம் மிகவும் மோசமாக சரிந்த நிலையில் இந்த வாரமும் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் சரிந்தது என்பதை பார்த்தோம்.

 இந்த நிலையில் நேற்று ஓரளவு பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். \

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்து 72,776 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 22,066 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

பங்குச் சந்தை தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு பங்கு சந்தை புதிய உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேபிடல், சிப்லா, ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் மணப்புரம் கோல்டு, ஐடி பீஸ், கோல்டு பீஸ் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இலாகா இல்லாத முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி அறிவிப்பு