1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (09:54 IST)

மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை: சென்செக்ஸ் 60 ஆயிரத்தை தாண்டியது!

Share
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பங்குச்சந்தை அடிக்கடி உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் நேற்று பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் சுமார் 250 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது என்பதும் இதனையடுத்து சென்செக்ஸ் 60 ஆயிரத்தை நீண்ட இடைவெளிக்கு பின்னர் தாண்டி உள்ளது என்று குறிப்பிடப்பட்டது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 50 புள்ளிகள் உயர்ந்து 17800ஐ  நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவதால் அதில் முதலீடு செய்தவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பதும் இழந்த நஷ்டத்தை மீட்டு தற்போது லாபத்தை நோக்கி முதலீட்டாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது
 
இனிவரும் காலத்திலும் பங்குச்சந்தை டிசம்பர் வரை உயரும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர் கற்றுக்கொள்கிறேன்
 
 
Edited by Siva