1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:18 IST)

சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுது

மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்து 56,037 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியிட்டெண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 16,682 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.