தொடர்புடைய செய்திகள்
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்!
- கனிமொழிக்கு பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர்! பெரும் பரபரப்பு
- சேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன்: காசா பணமா, அடிச்சு விடும் சுயேச்சை வேட்பாளர்!!!
- ஆண்களுக்கு10 லிட்டர் பிராந்தி, பெண்களுக்கு 10 பவுன் நகை; சுயேச்சை வேட்பாளரின் வாக்குறுதி!!!
- அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா?
நான் ஜெயித்தால் யானை வாங்கித் தருகிறேன்: அதிமுக வேட்பாளர் பொளேர்!!!
மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றுவேன் என திருவண்ணாமலை நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி செங்கத்தில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எனது சொந்த செலவில் திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலுக்கு யானை வாங்கிக் கொடுப்பேன். இரவு பகல் பாராமல் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுவேன். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
