செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (17:03 IST)

இரண்டாம் கட்ட இறுதி வேட்பாளார் பட்டியல் – நாளை வெளியீடு

புதிதாக விண்ணப்பித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை வெளியாகும் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் தெரிந்துகொள்ளலாம் என தேர்தல் அதிகாரி தெரிப்வித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழகத் தேர்தல் ஆணையம். பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் விடுபட்ட பெயர்களை சேர்த்தல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெயர் இருத்தல் போன்றவற்றைத் திருத்தும் பணி மூன்று மாதக்காலமாக நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர். இதில் ஆண்கள் 2.92 (2,9256,960) கோடி பேர். பெண்கள் 2.98  (2,98,60,765) கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர் 5472  பேர் ஆகும்.

வாக்காளர்கள் தத்தம் பெயரைச் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயரை நீக்குவதற்கு படிவம் 7, திருத்தங்களுக்குப் படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஏ ஆகியவற்றைப் பெற்று பூர்த்தி செய்து  அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்காக மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் பட்டியலில் இடம்பெறும் என முன்னதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இப்போது 2 ஆம் கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நாளை வெளியிட உள்ளது. இதில் புதிய வாக்காளர் படங்கள் அதில் இடம்பெறும். அவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வேறு ஏதேனும் அரசு அடையாள அட்டைகளைக் கொண்டு வாக்களிக்கலாம்.