வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (20:27 IST)

துவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12 வது தொடர் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டி மே 2 வது வாரம் வரை நடைபெறுகிரது. முதல் போட்டியே சென்னையில் துவங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இரு விக்கெட்டை இழந்து பெங்களூர் அணி தடுமாறி வருகிறது. 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 28 ரன்கள் எடுத்துள்ளது.