1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (12:17 IST)

வீட்ல சும்மா இருந்தா போர் அடிக்கும்ல... டேட்டா + டாக்டைம் அள்ளிக்கொடுக்கும் அம்பானி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆட்-ஆன் ரீசார்ஜ் மீது சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் ரீசார்ஜ் சேவையை வழங்கியது. தற்போது இந்த ரீசார்ஜ் சேவையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 
 
ஆம், ஆட்-ஆன் ரீசார்ஜ் செய்யும் போது  முன்பை விட இருமடங்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் வழங்கப்படுகிறது. அதாவது, முறையே ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட்-ஆன் ரீசார்ஜ் 400 எம்பி, 1 ஜிபி, 3 ஜிபி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. 
 
ஆனால், த்ற்போது இந்த மாற்றத்திற்கு பிறகு 800 எம்பி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இதேபோல வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்கு அதிகமாகக்கப்பட்டுள்ளது.