1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
  4. job opportunities in chennai temple

கோவிலில் வேலை!.. 48 ஆயிரம் சம்பளம்!. உடனே அப்ளை பண்ணுங்க!...

temple
சென்னையில் உள்ள பூங்கா நகரில் இருக்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை அறிவித்திருக்கிறது. மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதுபற்றிய விபரங்களை பார்ப்போம்.

அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓதுவார், சுயம்பாகி, தோட்ட பராமரிப்பாளர், கால்நடை பராமரிப்பாளர், ஸ்ரீபாதம் தாங்கி, சரக்கரை காப்பாளர் என மொத்தம் 8 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி & வயது: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. 01.07.2025 தேதியின்படி 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: அதிகபட்சமாக 13,200 முதல் 41800 வரை சம்பளம் கொடுக்கப்படும்

விண்ணப்பிக்கும் முகவரி: செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், எண் 315, தங்கசாலை தெரு, சென்னை 600003 என்கிற முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கடைசிநாள்: 27.01.2025 தேதி கடைசிநாள்..

மேலும் தகவலுக்கு https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php டவுண்ட்லோட் செய்து படித்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
போடுறேன் பார்ரா மீட்டிங்கு!.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துகு பிளான் போடும் விஜய்!..