தொடர்புடைய செய்திகள்
- பெண்கள் எந்த உடை அணியவும் சுதந்திரம் உண்டு! – பிரியங்கா காந்தி கருத்து!
- ஹிஜாப் விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மலாலா!
- ஹிஜாப் அணியலாமா? கூடாதா? கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு!
- மாணவர்கள் மத்தியில் மதவாத விஷம்… கவனமா இருக்கணும்! – கமல்ஹாசன் ட்வீட்!
- மக்களவையில் ஒலித்த ஹிஜாப் விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு விருது!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஷைமோகாவில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய கல்லூரி மாணவியை துரத்திச் சென்று ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டனர் மாணவர்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமான அந்த மாணவி தைரியமாக அல்லாஹு அக்பர் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இதனிடையே கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
