1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. girl telling tablets price very high in america

இந்தியாவில் 35 ரூபா!.. அமெரிக்காவில் 85 ஆயிரம்!.. அமெரிக்க பெண் புகார்!...

america
பொதுவாவே இந்தியாவில் வசிக்கும் பலருக்கும் நாம் வெளிநாடுகளில் வசிக்க வேண்டும்.. அங்கெல்லாம் சிஸ்டம் சரியாக இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.. ஆனால் இந்தியாவை ஒப்பிடும்போது எல்லா பொருட்களின் விலையும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பல மடங்கு அதிகம் என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மருத்துவ செலவுகள் மிகவும் அதிகம். மாத்திரைகளின் விலையை இந்தியாவுடன் ஒப்பிட்டால் பல மடங்கு அதிகம்.. இது அங்கு வசிப்பவர்களுக்கு தெரியும்..

இந்நிலையில்தான், அமெரிக்காவில் ரூ.85 ஆயிரத்திற்கு விற்கப்படும் கேன்சர் மாத்திரை இந்தியாவில் வெறும் 35 ரூபாய்தான் என அமெரிக்கா பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Liz என்கிற அந்த பெண் தனது அத்தைக்கு ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக அங்கு மாத்திரை வாங்கியிருக்கிறார். அதன் விலை 900 டாலர். இந்திய மதிப்பில் 85 ஆயிரம்.

அவர் இந்தியாவுக்கு வந்தபோது அந்த மாத்திரை என்ன விலை என அவர் விசாரித்த போது வெறும் 35 ரூபாய் என தெரிய வந்திருக்கிறது. இதைக்கேட்டு அவருக்கு தலையே சுற்றி விட்டதாம். ‘அமெரிக்க மருத்துவ துறை எங்களை கொள்ளையடிக்கிறது ஆனால் இந்தியாவோ உலகின் மிக மலிவான மருந்துகளை மக்களுக்கு தருகிறது’ என்று அவர் தனது சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்..