1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (08:27 IST)

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடக்க உள்ளன.

இம்மாத இறுதிவரை இந்த தொடர் நடக்கவுள்ள நிலையில் அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது.

அடுத்தடுத்து சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் அவர்கள் விளையாடவுள்ளதால் அவர்களுக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு பதில் ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.