1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (13:57 IST)

#WolrdCup2023: மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு தண்ணீர் பாட்டில் ஃப்ரீ! -ஜெய்ஷா

Icc World cup 2023
ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டில் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான அனைத்து நாட்டு வீரர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் முடிந்து,  இன்று முதல் உலகக் கோப்பை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில், நியூசிலாந்து - இங்கிலாந்து இடையே முதல் போட்டி நடக்கவுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள  இத்தொடரில் யார் உலகக் கோப்பை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள  அனைத்து அணிகளைச் சேர்ந்த கேப்டங்களின் குழு புகைப்படத்தை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்கவுள்ள ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை  பிசிசிஐ செயலாளர்  ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். அதில், ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டில் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.