தொடர்புடைய செய்திகள்
- நடுவானில் திவாலான விமானங்கள்.. அவசரமாக தரையிறக்கம்! – மும்பை பயணிகள் அதிர்ச்சி!
- கோலி கம்பீர் சண்டை… கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – ஹர்பஜன் சிங் வேதனை!
- இப்ப அக்னி நட்சத்திரமா தகிக்கும் கம்பீரும், கோலியும் ஒரு காலத்துல எப்படி இருந்தாங்க தெரியுமா?- ஒரு குட்டி ஸ்டோரி!
- 68.72 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- இந்தியா மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடம் - இது வரமா, சாபமா?
என் அணியைத் திட்டுவது குடும்பத்தைத் திட்டுவது போல- இதுதான் கோலி கம்பீர் வாக்குவாதத்தில் பேசியதா?
நேற்று முன் தினம் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இருவரும் வாக்குவாதத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன்படி கோலியிடம் கம்பீர், “நீ என் அணி வீரர்களை அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என்பது என் குடும்பம் போன்றது. உன் வார்த்தைகள் என் குடும்பத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது” எனக் கூற, அதற்கு கோலி “உங்கள் குடும்பத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்