தொடர்புடைய செய்திகள்
- டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் எவ்வளவு நாளைக்கு?... பதிலளித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா!
- 20 கிலோ எடை குறைத்தால் ஐபிஎல் தொடரில் எடுத்துக் கொள்கிறேன்… ஆப்கன் வீரருக்கு அட்வைஸ் செய்த தோனி!
- டி 20 போட்டியில் கோலிக்கு மாற்று இவரா?… ஒட்டுமொத்தமாக அணியை விட்டு நீக்க பிசிசிஐ முடிவு!
- முகமது ஷமியை டிரேட் செய்ய முயலும் ஐபிஎல் அணி.. குஜராத் அணி நிர்வாகி தகவல்!
- ஐபிஎல் மினி ஏலத்தை நடத்த உள்ள முதல் பெண்ணாக மல்லிகா சாகர்… பிசிசிஐ முடிவு!
ஐபிஎல் தொடரில் இருந்து இம்பேக்ட் விதியை நீக்கவேண்டும்… முன்னாள் வீரர் கருத்து!
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இம்பேக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.
இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கும் பொருந்தும். இதனால் கடந்த சீசனில் ஆல்ரவுண்டர்களுக்கான பங்களிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் “இம்பேக்ட் ப்ளேயர் விதி இருப்பதால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச ஊக்குவிக்கப்படுவதில்லை. அதுபோல பவுலர்களுக்கும் பேட்டிங்கில் பங்களிப்பு இல்லை. இந்த விஷயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணிக்கு வலியுறுத்தி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.