தொடர்புடைய செய்திகள்
- மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிய இங்கிலாந்து!
- விரைவில் இங்கிலாந்து சிட்டிசன்ஷிப்.. ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆசைப்படும் முகமது ஆமீர்
- ஆஷஸ் தொடர்.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்!
- ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்.. ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவு!
- முதல் இரண்டு போட்டியை தோற்றாலும்.. முடிவு வேற மாதிரி இருக்கும் – பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுல் செய்ய முடிவு… ஆஸி அணியில் நடந்த மாற்றம்!
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் எப்படியாவது மூன்றாவது போட்டியை வென்று தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.
இந்நிலையில் இன்று மூன்றாவது ஆஷஸ் போட்டி ஹெட்டிங்லியில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி ஆஸி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட் செய்ய உள்ளது. ஆஸி அணியில் காயம் காரணமாக வெளியேறிய நாதன் லயனுக்குப் பதில் டாட் மர்ஃபியும், ஹேசில்வுட்டுக்கு பதில் ஸ்காட் போலண்ட்டும் எடுக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்