1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (22:27 IST)

புதிய வீர்ர்களை வித்தியாசமாக வரவேற்ற ’தல’ தோனி !

புதிய வீர்ர்களை வித்தியாசமாக வரவேற்ற ’தல’ தோனி !
சென்னை அணியின்  புதிய வீர்ர்களை இன்று     கேப்டன் தோனி வரவேற்றார்.

ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது.. இந்நிலையில் சென்னை அணியின்  புதிய வீர்ர்களை இன்று     கேப்டன் தோனி வரவேற்றார்.

 
ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்கான சென்னை  அணியினர் மும்பை வானகடே மைதானத்தி பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை அணிக்கு கெளதம், மொயின் அலி, சேத்தேஷ்வர் புஜாரா, பகத் வ்ர்மா, ஹரிநிசாந்த், ஹரி சங்கர் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கபப்ட்டனர்.

அவர்கள் அனைவரும் பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில் இன்று புதிய வீர்ர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புதியவர்களுக்கு புதிய ஜெர்ஸியை வழங்கி தோனி வரவேற்றார்.