வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (09:10 IST)

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் விளையாட வீரர்கள் இன்று தேர்வு!

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான வீரர்களின் தேர்வு  சென்னையில் இன்று நடைபெறுகிறது
தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் 3வது சீசன் வரும் ஜூலை மாதம் 11ம் தேதி தொடங்கவுள்ளது.
 
இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
 
இந்த வீரர்கள் தேர்வுக்காக 772 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயரை பதவி செய்து உள்ளனர். இவர்களில் சிறப்பான வீரரை 8 அணிகளின் உரிமையாளர்களும் தங்களது அணிக்காக தேர்வு செய்ய உள்ளனர்.