வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (15:26 IST)

டாஸ் போடும் முறை தொடரும்: ஐசிசி முடிவு!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும் முறை தொடரும் என ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
 
கிரிக்கெட் போட்டியின் போது எந்த அணி பேட் செய்ய வேண்டும் எந்த அணி பவுல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய பல காலமாக டாஸ் போட்டு வருவது வழக்கமானது. 
 
ஆனால், தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது போல டாஸ் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க ஐசிசி தீவிர ஆலோசனை செய்து வந்தது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறை தொடரும் என முடிவு செய்யப்பட்டது.
 
மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு கைகொடுக்கும் வகையில் ஆடுகளம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், போட்டியின் போது வீரர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.