1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav will be lead Mumbai Indians against csk

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

IPL 2025
22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் Great Rivalry போட்டியாக கருதப்படும் இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த போட்டிக்கான மும்பை அணியில் ஏற்கனவே காயம் காரணமான நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் விளையாட மாட்டார். கடந்த சீசனில் மூன்று போட்டிகளில் மெதுவான வேகத்தில் பந்து வீசியதால் அவருக்கு இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த முதல் போட்டியில் மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என ஹர்திக் பாண்ட்யா அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார், 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!