1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh Raina said that dhoni will play one more IPL

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

தோனி
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

இந்த தொடரின் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள அவரின் சக வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா “அனைவரு தோனியின் பிட்னெஸ் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவரின் ஷாட் ஆடும் திறனும், பேட்டின் வேகமும்தான் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடக் காரணம். அவர் ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னை வந்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி செய்கிறார். அவர் இன்னும் ஒரு சீசனாவது ஆடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!