வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (10:58 IST)

தென்னாப்பிரிக்கா அணிக்கு அபராதம் விதித்த ஜசிசி நடுவர்கள்

தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தென்னாப்பிரிக்கா அணி பந்து வீசி முடிக்காத காரணத்திற்காக ஜசிசி அபராதம் விதித்துள்ளது. 

 
ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த இருஅணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவருக்கான நேரத்திற்கு மேல் தென்னாப்பரிக்கா அணி பவுலர்கள் பந்துகளை வீசினர்.
 
இதனால் ஜசிசி நடுவர்கள் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ராமுக்கு போட்டியில் 20 சதவிதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு 10 சதவிதமும்  போட்டி ஊதியத்தில் இருந்து அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டனர்.