வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (18:00 IST)

இந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்....

இந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. 
 
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. தவான் சதம் விளாசி ஆசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பரிக்க அணி களமிறங்கியது. 
 
தென் ஆப்பரிக்க பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பரிக்க அதிரடியாக ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
தென் ஆப்பரிக்க, டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18 வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 8 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார். 
 
ஆனால் சாஹல் நோ பால் வீசினார். இதில் இருந்து தப்பித்த மில்லர், அடித்து அதிரடியாக விளையாடினார். மில்லரின் அதிரடி ஆட்டம் போட்டியின் போக்கையே மாற்றியது. 
 
சாஹல் நோ பால் வீசாமல் இருந்து இருந்தால், மில்லர் அவுடாகியிருந்தால் இந்தியாவின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். இந்த நோ பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது.