தொடர்புடைய செய்திகள்
- ரோகித் மிஸ்ஸிங்? புளுகு மூட்டை கோலி: ஒரு செல்பியால் வந்த சர்ச்சை!
- முகமது சமியால் விளையாட முடியாதா? – விசாவை ரத்து செய்த அமெரிக்கா?
- ராணுவ பணிகளுக்காக காஷ்மீர் போகிறார் தோனி – ரசிகர்கள் பதட்டம்
- கோஹ்லியை விட அதிகம் சம்பாதிக்கும் ப்ரியங்கா சோப்ரா – எதில் தெரியுமா?
- ’அந்த விமர்சனங்கள் தான் ’என்னை முன்னேற்றியது - விராட் கோலி 'ஒபன் டாக்'
கோஹ்லியை நீக்க நினைப்பது முட்டாள்தனமானது – ஷோயப் அக்தர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லியை நீக்க நினைப்பது முட்டாள்தனமான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உலக கோப்பையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் கேப்டன் விராட் கோஹ்லிதான் என பலரும் விமர்சித்து வந்தார்கள். இதற்கிடையே கோஹ்லிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே மோதல் வலுத்து வருவதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் “விராட் கோஹ்லி சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நல்ல கேப்டனும் கூட. விராட் கோஹ்லி கேப்டனாக தொடருவதுதான் இந்திய அணியின் எதிர்காலத்துக்கு நல்லது. அவருக்கு தேவை சரியான தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும்தான்.
விராட் கோஹ்லியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது முட்டாள்தனமானது. ரோஹித் ஷர்மா கேப்டன் ஆக நினைப்பதை கோஹ்லி தடுக்கிறார் என்று வலம் வரும் செய்திகள் வதந்தியாகதான் இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்