வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (11:15 IST)

ரோகித் மிஸ்ஸிங்? புளுகு மூட்டை கோலி: ஒரு செல்பியால் வந்த சர்ச்சை!

கோலி சக வீரர்களுடன் எடுத்த ஒரு செல்பியால் ரோகித்துக்கும் அவருக்கும் இடையேயான மோதல் உறுதியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 
 
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படும் முன்பாக விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது, ரோகித்துடனான மோதல் குறித்து கேள்வு எழுப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு, 
 
எனக்கு ஒரு நபரை பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடம் எப்படி நடந்துக்கொள்கிறேன் என்பதை என் முகத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளாம். நான் ரோகித் சர்மாவை பல முறை பாராட்டி உள்ளேன். அவர் சிறந்தவர் என்பதை நம்புகிறேன். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். 
கோலியின் இந்த பேட்டிக்கு பின்னர் பிரச்சனை ஏதும் இல்லை என தெளிவானதாக நினைத்த நிலையில், தற்போது கோலி இந்திய அணி வீரர்களுடன் எடுத்துள்ள செல்பியில் ரோகித் இல்லாதது மீண்டும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த செல்பியை கண்ட சமூக வலைத்தள பயனர்கள், ரோகித்துடன் பிரச்சனை இல்லை என சொன்னீர்கள். ஆனால் செல்பியில் ரோகித்தை காணவில்லை. கோலி நீங்கள் பொய் சொல்லி இருக்கிறீர்கள் என விமர்சித்து வருகின்றனர்.