தொடர்புடைய செய்திகள்
- மோடிக்கு சவால்விடும் தலைவர் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை: முன்னாள் முதல்வர் பேட்டி..!
- சென்னை மற்றும் பெங்களூருவில் விளையாட மறுக்கும் பாகிஸ்தான்? பிசிசிஐ பிடிவாதம்!
- அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வைத்து மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறார்கள்- கொ.இ.பேரவை கார்வேந்தன்
- திடீர் கனமழைக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்
- இருசக்கர ஊர்தி, மகிழுந்துகளுக்கான சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? அன்புமணி ராமதாஸ் டுவீட்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகிறாரா சேவாக்?
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அப்போதைய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். அது பிசிசிஐ வட்டாரத்தில் புயலைக் கிளப்பியதால் அவர் பின்னர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
அதன் பின்னர் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு இடைக்கால குழுவிக்கு சிவசுந்தர் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்த குழு கலைக்கப்பட்டு புதிய தேர்வுக்குழு உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் புதிய தேர்வுக்குழுவுக்கு தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் விரேந்திர சேவாக்குக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அவரை தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க சொல்லி பிசிசிஐ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்