தொடர்புடைய செய்திகள்
- PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!
- வெளிநாட்டில் பிச்சையெடுக்கும் பாகிஸ்தானியர்கள்.. பாஸ்போர்ட்டை முடக்கி நடவடிக்கை..!
- பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!
- அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?
- கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!
IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!
இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் வடிவமாக டி 20 கிரிக்கெட் உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் லீக் போட்டிகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். இதில் மிகப்பிரபலமாக இருப்பதும் அதிகம் பேரால் விரும்பிப் பார்க்கப்படுவதுமான தொடராக பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் உள்ளது.
இதில் 2 மாதங்கள் விளையாடும் ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளுக்காக ஒரு ஆண்டு விளையாடினால் சம்பாதிக்கும் வருவாயை விட பல மடங்கு சம்பாதிக்க முடிகிறது. இதன் காரணமாக உலகில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் காரணமாக இந்த தொடருக்கு ஸ்பான்சர்கள் குவிகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் PSL தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸிடம் “நீங்கள் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் ஆகிய இரண்டு தொடர்களிலும் விளையாடியுள்ளீர்கள்.. இரண்டில் எது சிறந்தது?” எனக் கேட்க அவரோ “ஐபிஎல் தொடருடன் உலகில் நடக்கும் மற்ற எந்த தொடரையும் நாம் ஒப்பிட முடியாது. ஐபிஎல் தொடர்தான் நம்பர் 1. அதற்கு இணையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி 20 தொடர்களைக் கூட சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.