1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:36 IST)

கே எல் ராகுல் கையால் கோப்பையை வாங்கவைத்த ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அதிரடியாக ஆடி 352 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஏற்கனவே தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில் இந்த தோல்வி ஆஸி அணிக்கு வெறும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது.

இந்நிலையில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக இருந்து தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த கே எல் ராகுல் கையால் கோப்பையை வாங்க வைக்க வேண்டுமென்று விரும்பிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை அழைத்து கோப்பையை வாங்கினார்.

இது சம்மந்தமான வீடியோ துணுக்குகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.