தொடர்புடைய செய்திகள்
- “ஷுப்மன் கில் கண்டிப்பாக பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார்…” முன்னாள் தேர்வுக்குழு தலைவர் உறுதி!
- அகமதாபாத்தில் ஒருமணி நேரம் பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
- “முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை…” பவுலிங் பற்றி பும்ரா கருத்து!
- சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்ட ஷுப்மன் கில்!
- WorldCup-2023 : ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி...ரோஹித் சர்மா புதிய சாதனை
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன பதில்!
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
காய்ச்சல் காரணமாக இந்திய அணியோடு டெல்லி செல்லாத அவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம்தான் நேரடியாக அகமதாபாத் சென்றார். அவர் அங்கு சுமார் ஒருமணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமை போட்டிக்கு முன்னர் அவர் தன்னுடைய உடல்தகுதியை நிரூபித்தால் அவர் அந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கில் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் கேப்டன் ரோஹித் ஷர்மா. அதில் “99 சதவீதம் அவர் பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார். ஆனாலும் பிளேயிங் லெவனை தெரிந்துகொள்ள நீங்கள் நாளை வரை (இன்று) காத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்