1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma becomes first batsman hit six in shaheen afridi first over

ஷாகீன் அப்ரிடிக்கு எதிராக இந்த சாதனையை செய்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாதான்!

கிறிஸ் கெயல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 போட்டி நேற்று இலங்கை பிரேம்தாசா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தநிலையில் 147 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்கள் இழந்திருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால், போட்டி ரிசர்வ் நாளான இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே அதிரடியாக சிக்ஸர் மூலம் கணக்கை தொடங்கினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் ஷாகின் அப்ரிடியின் பந்தில் முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!