1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant will undergo surgery in Mumbai ambani hospital

மும்பையில் அம்பானி மருத்துவமனையில் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை!

ரிஷப் பண்ட்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு விளையாட்டு மருத்துவத் துறை தலைவர் தின்ஷா பாத்திவாலா நேரடிக் கண்காணிப்பில் உள்ளார். பண்ட்டுக்கு இங்கு முழங்கால் அறுவை சிகிச்சை விரைவில் நடக்க உள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்