தொடர்புடைய செய்திகள்
- விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் திட்டம் இதுதான்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!
- பந்தைக் கணிப்பதில் கோலியிடம் பிரச்சனை…. சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!
- விராட் கோலிக்கு என்ன ஆச்சு?... திடீரென நடந்த மருத்துவப் பரிசோதனை!
- அரசன் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டார்… கோலியைப் புகழ்ந்த ரவி சாஸ்திரி
- ‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் நான் விடுவிக்கப்பட காரணம் பணம் இல்லை… ரிஷப் பண்ட்டின் பதிவு!
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டு சஞ்சய் பாங்கர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணிக்கு ஒரு இந்திய வீரரைப் பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என்ற முடிவால்தான் பாண்டிங் விடுவிக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தக்கவைக்கப் படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு அவர் கேட்ட தொகை டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் தர முடியாததால்தான் அவர் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது ரிஷப் பண்ட் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் “நான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது பணம் இல்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்