தொடர்புடைய செய்திகள்
- பவுலர்களை தண்ணி குடிக்கவைத்த சுனில் நரேன்… அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு!
- ஐபிஎல் திருவிழாவில் இன்று நம்பர் 1 இடத்துக்கான போட்டி- KKR vs RR டாஸ் அப்டேட்!
- டாஸ்ல கூட ஏமாத்து வேலையா? மும்பை இந்தியன்ஸை பேட் கம்மின்ஸிடம் விமர்சித்த டூ ப்ளெசிஸ்!? நடந்தது என்ன?
- ஆர்சிபியின் தொடர் தோல்வி.. இனி நான் விளையாட மாட்டேன்!? – மேக்ஸ்வெல் எடுத்த அதிர்ச்சி முடிவு!
- வெளியே சிரிப்பு.. ஆனா உள்ளே அழுகை- ஹர்திக் பாண்ட்யா பற்றி பீட்டர்சன் கமெண்ட்!
மேக்ஸ்வெல் இப்போது இதைதான் செய்யவேண்டும்… ரிக்கி பாண்டிங் அட்வைஸ்!
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஆறில் தோற்று மோசமான நிலைமையில் உள்ளது. அந்த அணியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “நான் நேராக டூ ப்ளெசியிடமும், பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதிலாக வேறு வீரரை விளையாட செய்வதற்கான நேரம் இது என்றேன். எனக்கு இதற்கு முன்னாலும் இப்படி நடந்துள்ளது. எனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவு ஓய்வு தேவை. மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமானார் அதற்குள் என்னை நான் திடப்படுத்திக் கொள்வேன்” என கூறியுள்ளார்.
இதுபற்றி இப்போது பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “கோலி போன்ற மிகச்சிறந்த வீரரோடு விளையாடும்போது நாம் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அழுத்தம் அதிகமாகும். மேக்ஸ்வெல் இப்போது சில போட்டிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியோடு மீண்டும் வந்து விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்