1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. MS Dhoni sad about CSK failure and inner problems

சிஎஸ்கே என்னும் கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள்! – தோனி வேதனை!

MS Dhoni. CSK
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடன் சிஎஸ்கே தோல்வியடைந்தது குறித்து மகேந்திர சிங் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸுடன் மோதிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 ஆட்டங்களில் தோல்வியடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ப்ளே ஆப்க்கு சிஎஸ்கே செல்லுமா என ரசிகர்களிடையே பதற்றம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னும் கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள் விழுந்துள்ளது. அதில் ஒரு ஓட்டையை அடைத்தால் மற்றொரு ஓட்டை உருவாகி விடுகிறது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சிரித்தே சிதறடிக்கும் வார்னர்; மல்லுக்கட்டுவாரா ஸ்மித்? - ராஜஸ்தான் vs ஹைதராபாத் மோதல்!