1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (11:07 IST)

பந்தை வீச சொன்னா மூஞ்சு மேல எறியுறார்! – சுனில் நரேனுக்கு எச்சரிக்கை!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு பந்து வீசிய கொல்கத்தா அணி பந்துவீச்சாளர் சுனில் நரேன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியிடம் தோல்வியை தழுவியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டிங் செய்தபோது பந்து வீசிய சுனில் நரேன் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் சுனில் நரேன் பந்துகளை வீசுவதற்கு பதிலாக காயம்படுத்தும் வகையில் எறிவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்த்து சுனில் நரேனுக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.