1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (12:36 IST)

கோலிக்கே மீண்டும் கேப்டன்சியைக் கொடுக்கவேண்டும்… இங்கிலாந்து வீரர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் தனது கேப்டன் பொறுப்புகளைத் துறந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரால் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவருக்கு பதிலாக பூம்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ள கருத்தில் “இந்த ஒரு போட்டிக்கும் கோலியையே கேப்டனாக நியமிக்கவேண்டுமென்று சொல்வேன். ஏனென்றால் இந்த தொடரின் முந்தைய போட்டிகளில் அவர்தான் கேப்டனாக இருந்தார். ஆனால் இது கோலி எடுக்கவேண்டிய முடிவு.” எனக் கூறியுள்ளார்.