தொடர்புடைய செய்திகள்
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: விராட் கோலி விலகல்
- ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..! டி20 போட்டிகள் இன்று தொடக்கம்..!!
- ரூ.2000 கோடிக்கு மேல் மக்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
இந்தூர் டி 20 போட்டிக்காக கிளம்பிய விராட் கோலி!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி மொஹாலியில் நடந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த தொடருக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருந்தும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டி 20 போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் நாளை நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் விளையாடுவதற்காக அவர் மும்பையில் இருந்து இந்தூர் கிளம்பி சென்று அணியுடன் இணைய உள்ளார்.
கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு அவர் டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.