செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (14:13 IST)

கோஹ்லிக்கும், வில்லியம்சனுக்கும் 19 வயதிலிருந்தே பகை – ஏன் தெரியுமா?

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆட்டம் அரையிறுதி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் தீவிரமான ஆர்வத்தோடு உள்ளனர்.

நியூஸிலாந்தின் கேப்டன் வில்லியம்சனுக்கும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கும் 11 வருடத்துக்கு முன்னால் தீராத ஒரு கணக்கு இருக்கிறது. ஒருவகையில் அதை தீர்த்து கொள்வதற்காகவே இந்த மேட்ச் என்று கூட சொல்லலாம்.

2008ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான உலக கோப்பை நடைபெற்றது அதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோஹ்லி, நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன். இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதின. அப்போது தனது அபார திறமையால் 43 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்தார் விராட் கோஹ்லி.

தற்போது 11 வருடங்கள் கழித்து இருவரும் தங்களது டீம் கேப்டன்களாய் அதே போன்ற மற்றொரு அரை இறுதியை எதிர்கொள்கிறார்கள். இதனால் இருவர் பக்கமுமே பலமான ஒரு மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.