தொடர்புடைய செய்திகள்
- என் போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்- ரஹானே ஆதங்கம்!
- டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?
- 8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!
- ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
- அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை… இளம் வீரர் குறித்து ஸ்ரீகாந்த் காட்டம்!
நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!
இந்தியக் கிரிக்கெட் அணியில் சேவாக்குக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே வீரர் என்றால் அது கருண் நாயர்தான். சேவாக் போல தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடாமல் ஐந்தாவது வீரராக இறங்கி அவர் அந்த சாதனையைப் படைத்தார். அதனால் இந்திய அணியில் ஒரு நிரந்தர பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஃபார்ம் அவுட் காரணமாக வாய்ப்புகளை இழந்தார்.
அதன் பின்னர் 9 ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதையடுத்து உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெண்டுல்கர்- ஆண்டர்சன் தொடரில் அவருக்கான வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் அந்த தொடரில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். இதன் காரணமாக அடுத்தடுத்தத் தொடர்களில் அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்துப் பேசியுள்ள கருண் “தொடர்ந்து 2 ஆண்டுகள் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய எனக்கு ஒரே ஒரு தொடரில் மட்டும் வாய்ப்பளித்தது ஏமாற்றமளிக்கிறது. நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்” எனக் கூறியுள்ளார்.