செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:54 IST)

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… கபில்தேவ் எச்சரிக்கை!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் லீக் போட்டிகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது. இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்த கபில்தேவ் மனதில் பட்டதை தைரியமாக கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் டி 20 போட்டிகள் மற்றும் தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்து வரும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “லீக் போட்டிகள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை பாதிக்கின்றன.

அவற்றைக் கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு ஐசிசிக்கு உள்ளது. தற்போதைய கிரிக்கெட் ஐரோப்பாவின் கால்பந்து போட்டிகளை போல உள்ளன. கால்பந்து போட்டிகளில் லீக் போட்டிகள் அதிகமாகி சர்வதேச போட்டிகள் என்பதே உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் விளையாடுவது போல கிரிக்கெட்டும் மாறிவிடும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.