1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:02 IST)

பா ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பில் அசோக் செல்வன் & சாந்தணு

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் தன்னுடைய உதவியாளர் ஜெயக்குமார் எழுதி இயக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சாந்தனு, அசோக்செல்வன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் கிரிக்கட்டை மையப்படுத்திய படமாக உருவாக உள்ளது. அரக்கோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட உள்ளது.