1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:03 IST)

பஞ்சாப் vs டெல்லி: புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம்!

நாளை பஞ்சாப் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதவிருந்த நிலையில் புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நாளை பஞ்சாப் அணியுடன் மோத டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புனே செல்ல இருந்தது.
 
ஆனால், டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் டெல்லி அணியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் கொரோனா காரணமாக டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.