1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2020; Kolkata won by 37 runs.

ஐபிஎல்-2020; 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி.. சரணடைந்த ஐதராபாத் !

ஐபிஎல்-2020; 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி  வெற்றி..  சரணடைந்த ஐதராபாத்
ஐபிஎல் -2020 கிரிக்கெட் தொடர் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு இந்தியாவில்நடக்கவில்லை என்றாலும் அதை ஈடுகட்டும் விதமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் போட்டிகள் அனைவரையும்  கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்  பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.  இந்த ஆட்டம் துபையில் நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் , சுனில் நரைன் 15 ரன்களும், தெவாதியா 22 ரன்களும்,ஆண்ட்ரே ரஸல் 47 ரன்கள் எடுது ஆட்டமிழந்தார். பின்னர் கார்த்திக் 1 ரன்களும்,  ரஸல் 24 ரன்கள், கம்மின்ஸ் 12 ரன்கள் எடுத்து நல்ல ஸ்கோர் பதிவு செய்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிஎப்படி விளையாடுமென்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். ஐதராபாத் அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்நிலையில் 37 ரன்கள் வித்தியாசத்தில்  கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் போட்டி: வெற்றி-தோல்வியில் ஒரு புதுமை