1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Indian team for Champions trophy to announced today

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

இந்தியா
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இதனால் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட உள்ளது.

அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.

இந்த தொடருக்காக அனைத்து நாட்டு வாரியங்களும் தங்கள் அணியை அறிவித்து விட்டன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொள்ள இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அகார்கர் மற்றும் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவிக்கவுள்ளனர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!