1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gambhir complaint on sarfaraz khan leaking issues to media

கம்பீரின் ஓய்வறைப் பேச்சுகளைக் கசியவிட்டாரா சர்பராஸ் கான்… கிளம்பிய சர்ச்சை!

ரோஹித் ஷர்மா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த தொடரின் போது மெல்போர்ன் டெஸ்ட்  தோல்விக்குப் பிறகு அந்த போட்டி முடிந்ததும் ஓய்வறையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், அணி வீரரகளைக் கோபத்தில் கண்டபடி திட்டியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கம்பீரின் பேச்சுகளை ஊடகத்துக்குக் கசியவிட்டவர் சர்பராஸ் கான்தான் என்று சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சர்பராஸ் கான் மேல் கம்பீர் பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அடுத்த கட்டுரையில்
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி.. அட்டவணையை அறிவித்த பிசிசிஐ..!